தனியார் கடன் செயலிகளை உருவாக்கி அப்பாவிகளிடம் பல கோடி மோசடி 4 பேர் கொண்ட கும்பல் கைது.
தனியார் கடன் செயலிகளை உருவாக்கி அதன் மூலம் பல அப்பாவிகளை மோசடி செய்து பல கோடி வரை பணம் சம்பாதித்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 4பேர் கொண்ட கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கால்சென்டர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது போல் இண்டர்வியு நடத்தி தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆபாசமாகவும் மார்பிங் செய்வதற்கும் கூட பயிற்சி அளிக்கப்படுவது தெரியவந்தது அவர்களின் 47 வங்கி கணக்கை முடக்கிய போலீசார் அந்த கும்பலின் தலைவனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags :