ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்
கேரளாவில் பாத யாத்திரையை முடித்து கொள்ளும் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 29-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.இதற்காக அன்று கூடலூருக்கு வரும் அவர், அன்றைய தினம் கூடலூரில் நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். கூடலூரில் நடைபயணத்தை முடித்து கொண்டு அடுத்த நாள் கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்கிறார். இந்த நிலையில் கூடலூரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இடம் மற்றும் இரவு தங்கும் இடத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்தனர்.
Tags :