வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

by Staff / 24-09-2022 02:31:54pm
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகன் ( 45) என்பவர் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கச் சென்றுள்ளார்.

மீண்டும் காலையில் எழுந்து கீழே வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிந்தது.இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via