16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் கடிதத்தால் பரபரப்பு

by Staff / 29-09-2022 01:09:31pm
16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் கடிதத்தால் பரபரப்பு

பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்
எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர் - PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார் என குறித்தும் குறிப்பாக தற்போதுள்ள சூழ்நிலையை வேறு யாரும் தவறுதலாக பயன்படுத்தி திசை திருப்பும் நோக்கில் செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via