டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

by Staff / 29-09-2022 03:39:35pm
டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் மேம்பாலம் பகுதியில் டிப்பர் லாரிகள் மோதிய விபத்தில், ஒரு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. மற்றொரு லாரி ரோட்டின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர், ரயில்வே மேம்பாலம் பகுதியில், சென்னிமலை செல்லும் ரோட்டில் பாலப்பாளையம் பிரிவின் அருகே, நேருக்கு நேர் டிப்பர் லாரிகள் மோதிய விபத்தில் கருங்கல் லோடுடன் கூடிய ஒரு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. மற்றொரு லாரி ரோட்டின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் பெருந்துறை ஆர் எஸ் வழியாக சென்னிமலைக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via