சிறுத்தைக்குட்டிகளுக்கு பாலூட்டிய முதல்வர்

by Staff / 06-10-2022 02:56:21pm
சிறுத்தைக்குட்டிகளுக்கு பாலூட்டிய முதல்வர்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை கோரக்பூர் உயிரியல் பூங்காவில் இரண்டு சிறுத்தைக்குட்டிகளுக்கு பாலூட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரண்டு சிறுத்தை குட்டிகளுக்கும் முதல்வர் பெயர் வைத்தார். மீரட்டில் உள்ள பக்வான்பூர் பங்கர் கிராமத்தின் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குட்டிக்கு 'சண்டி' என்றும், பிஜ்னோர் காட்டில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாவது பெண் குட்டிக்கு 'பவானி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இயற்கையின் மீதும், விலங்குகளின் பாதுகாப்பு குறித்தும் மனிதன் தன் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே அவன் காக்கப்படுவான் என்றார் முதல்வர். வனவிலங்குகளைப் பாதுகாக்க அனைத்து மக்களும் பங்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

Tags :

Share via