பராமரிப்பு பணிகள் காரணமாக பல ரயில்கள் பகுதியாக ரத்து.

by Editor / 03-11-2022 09:53:34pm
பராமரிப்பு பணிகள் காரணமாக பல ரயில்கள் பகுதியாக ரத்து.

ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில் பாதைகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக நவம்பர் 7 முதல்  நவம்பர் 12 வரை மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை மதுரை சிறப்பு ரயில் (06664) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மதுரை விழுப்புரம் விரைவு ரயில் (16868) நவம்பர் 8, நவம்பர் 10 முதல் 12 வரை, நவம்பர் 28 முதல் 30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை நவம்பர் 18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயில் (16322) மற்றும் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) நவம்பர் 22, 25, 26 ஆகிய நாட்களில் முறையே 90 மற்றும் 70 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி வந்து சேரும். நவம்பர் 30 அன்று மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07129) காலை 05.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.15 மணிக்கு 45 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

 

Tags :

Share via