கல்குவாரி மலை மொத்தமாக சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் சிக்கினர்..?

by Editor / 15-11-2022 10:14:47am
கல்குவாரி மலை மொத்தமாக சரிந்து  விழுந்ததில் 15  தொழிலாளர்கள் சிக்கினர்..?

 மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி மலை ஒன்று அப்படியே மொத்தமாக இடிந்து விழுந்ததில் 15 பீகார் தொழிலாளர்கள் சிக்கினர். மலை சரிந்து விழுந்ததில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மிசோரம் மாநிலத்திலும் இத்தகைய கல்குவாரிகள் அதிகம் உள்ளன. மிசோரம் மாநிலத்தின் ஹனாதியால் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பீகார் மாநிலத்தவர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவுக்காக சென்றிருந்தனர்.

அதேநேரத்தில் பல தொழிலாளர்கள் கல்குவாரியின் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல்குவாரி மலை அப்படியே மொத்தமாக சரிந்து கீழே வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த  சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 15 தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் கல்குவாரி மலை அப்படியே சரிந்து மொத்தமாக கீழே விழும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

கல்குவாரி மலை மொத்தமாக சரிந்து  விழுந்ததில் 15  தொழிலாளர்கள் சிக்கினர்..?
 

Tags :

Share via