படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி

by Staff / 18-04-2024 11:31:12am
படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி

காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் பள்ளி மாணவர்கள் உள்பட பயணிகள் நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) படகில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கந்த்பால் நவ்கம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிருக்குப் போராடிய 10 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், இதில் 3 பேர் மட்டும் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் 2 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோ படை களத்தில் இறங்கியுள்ளது.

 

Tags :

Share via