பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்  குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 25-06-2021 06:18:30pm
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்  குண்டர் சட்டத்தில் கைது


சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடையுடன் பாடம் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் ராஜகோபாலன்.
அவரை இந்த பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் 5 நாட்கள் கோரப்பட்டது. ஆனால், சென்னை போக்சோ நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. 
அதன்பின்னர் ராஜகோபாலன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராஜகோபாலனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து இந்த புகார்கள் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via