ரயில் என்ஜின்களை திருடிய திருடர்கள்

by Staff / 26-11-2022 04:58:27pm
ரயில் என்ஜின்களை திருடிய திருடர்கள்

பீகார் மாநிலத்தில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து திருடர்கள் டீசல் இன்ஜினை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த திருடங்கள் ரயில் பெட்டிகளில் இருந்து என்ஜினின் உதிரிபாகங்களை திருடுவதற்காக தனி சுரங்கம் அமைத்து வேலையை காட்டியுள்ளனர். திருடிய பொருட்களை இவர்கள் பழைய இரும்பு கடையில் விற்றுள்ளனர்.இதை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் 13 சாக்கு மூட்டைகளில் என்ஜின் உதிரி பாகங்கள், பழங்கால ரயில் என்ஜினின் சக்கரங்கள், காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நீராவி என்ஜின் என பலதரப்பட்ட பகுதிகள் கைப்பற்றப்பட்டது. பகுதி பகுதியாக அவர்கள் முழு ரயிலையே திருடியுள்ளதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இத்தனை பெரிய திருட்டு நடைபெற்றபோது, அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் இருந்தது? இந்த திருட்டில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது வைத்துள்ளது.

 

Tags :

Share via