ரூ. 47 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

by Editor / 10-01-2023 09:14:00pm
ரூ. 47 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், பண்ணையார்குளத்தை சேர்ந்த இசக்கி (30) என்பவர் இணையதளத்தில் ஆதார் பேமெண்ட் மூலமாக ரூபாய் 47 ஆயிரம் பணத்தை பெறுவதில் மோசடி நடைப்பெற்றது.இது குறித்து இசக்கி பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜு க்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்  ராஜ், உதவி ஆய்வாளர் ,ராஜரத்தினம், ,ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக இசக்கி என்பவருடைய ரூபாய் 47 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம்  வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக பணத்தின் உரிமையாளரிடம் 10.01.2023 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வழங்கினார்.

 

Tags :

Share via