ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்திய வேட்பாளர்கள்.

by Editor / 27-02-2023 10:23:52am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்திய வேட்பாளர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். அதே போல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். வெற்றி பெற முடியாது என்பதால் மை அழிவதாக எதிர்க்கட்சியினர் பொய் குற்றச்சாட்டு கூறுவதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via