தாய் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை.

by Staff / 07-03-2023 02:50:44pm
தாய் இறந்த சோகத்தில் பெண்  தற்கொலை.

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வண்டா விளையை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகள் செல்வ மகள் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் இறந்தார். அதன்பிறகு சகோதரி மற்றும் தந்தை அப்பாதுரை, சகோதரர் அன்னக்குமார் ஆகியோர் கண்காணிப்பில் செல்வ மகள் இருந்து வந்தார். இருப்பினும் தாய் இறந்த சோகத்தில் அவர் இருந்துள்ளார். உறவினர்கள் ஆறுதல் கூறியும் அவர் கவலையாகவே இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிய செல்வ மகள், அதிகாலை யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள தனது அறையில் நைலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் உறவி னர்கள் எழுந்து பார்த்த போது தான் இதுபற்றி தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீ சார் விரைந்து வந்து செல்வமகள் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது சகோதரர் அன்னக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via