மதுரையில் கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது: 21 கிலோ கஞ்சா, இருக்கார வாகனம் பறிமுதல்
மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் எஸ் எஸ் காலனி காவல் நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது
இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது சிறிய பண்டலாக 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த காந்தி மகன் கிருஷ்ணகுமார் என்பதும், மதுரை நகரில் சில்லறை விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தெடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :