ஆட்டோவில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது

by Staff / 21-03-2023 01:13:11pm
ஆட்டோவில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற பல்லு மோகன் (33), கல்யாண பந்தல் சமையல் ஆர்டர் எடுத்து வேலை. செய்பவர். கோயில் திருவிழாவுக்காக பந்தல் போடுவதற்காக புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் தெருவில் உள்ள முருகன் கோயிலுக்கு கடந்த இரண்டு நாட்களாக பந்தல் போட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு மோகன் மற்றும் அவரது தம்பியான தீபன் வேலைகளை முடித்துவிட்டு தீபன் வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் இருந்த மோகன் நான் இங்கே தங்கி விட்டு வருகிறேன் என்று தனது தம்பியிடம் கூறியுள்ளார். அதே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோவில மோகன் சென்று உறங்கியுள்ளார். இன்று அதிகாலை ஆட்டோ எடுப்பதற்காக உரிமையாளர் விஜய் வந்து பார்த்தபோது ஆட்டோவில் உள்ளே மோகன் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார் இதைபார்த்த ஆட்டோ உரிமையாளர் அதிர்ச்சியடைந்து காவல் கட்டு பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது இருவர் தப்பி செல்வது தெரியவரவே விசாரணையை துரிதப்படுத்தி தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஐஓசி பகுதியை சேர்ந்த சிவா ஆகிய இருவரும் இருப்பது தெரிய வந்தது இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மணிகண்டனுக்கும் இறந்த மோகன் என்பவருக்கும் டிஜே. பந்தல் போடுவது போன்ற ஆர்டர்கள் அதிக அளவில் பல்லு மோகனுக்கு கிடைத்தாலும்முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.பின்னர் இரவு வேலை முடித்து விட்டு சம்பவ இடத்திலேயே பல்லு மோகன் உறங்கிய போது தனது கூட்டாளி சிவாவுடன் அங்கு வந்த மணிகண்டன் சமாதானம் செய்வது போல் பல்லு மோகனை எழுப்பி மது கொடுத்து விட்டு முன் தாங்கள் தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவா கைபிடிக்க மணிகண்டன் கொடூரமாக அறுத்து கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.. தொழில் போட்டி காரணமாக கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து கொலை செய்து இருவர் கைது செய்யப்பட்ட ள்ள சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via