சங்ககிரி அருகே நீச்சல் பழகிய 6 வயது சிறுவன் பலி
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள பக்காளியூரில் தந்தை தனது குழந்தைக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.பக்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் ஹரிஷ் (6). மகனுக்கு தந்தை கிணற்றில் நீச்சல் கற்று கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இதனையடுத்து அவரது தந்தை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வருமொழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலுபம்இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :