இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் வந்து அகதிகள் முகாமில் தங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

by Editor / 10-05-2023 08:34:48am
இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் வந்து அகதிகள் முகாமில் தங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு ஈ.சி.ஆர் சாலை அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. க்யூ பிரான்ச் மற்றும் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் உள்ள இந்தப் பகுதியில் ஒருவர் இலங்கையதிலிருந்து வந்து தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை கண்காணித்த போலீசார் ஒரு வீட்டில் இருந்த அவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் இலங்கை, மன்னார் மாவட்டம் சாந்திபுரம் அருகே உள்ள சௌவுத்பார் பகுதியைச் சேர்ந்த குருகுலசிங்கம் வயது 44 என்பதும், இவர் தனது மனைவி மகளுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் சட்டப்படி தங்கியிருந்து மனைவி மற்றும் மகளை முகாமிலேயே விட்டுவிட்டு பின்னர் குருகுலசிங்கம் மட்டும் 2015 ஆம் ஆண்டு இலங்கை சென்று விட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமுக்கு வந்து மக்களோடு மக்களாக இருந்தது தெரிய வந்தது. வெளிநாட்டினரான குருகுலசிங்கம் கடவுச்சீட்டு மற்றும் அனுமதி ஏதுமின்றி இந்தியாவிற்குள் அத்துமீறி வந்ததற்காக கோட்டகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via