கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உள்ளிட்ட இரண்டு பேர் கைது

by Staff / 19-05-2023 03:55:05pm
கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உள்ளிட்ட இரண்டு பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 2 பேர் கைது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர் மற்றும் போலீசார் நேற்று (18. 05. 2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்தவர்களான ஜெயம் மகன் வெற்றிவேல் முருகன் (எ) சின்னத்தம்பி (27) மற்றும் செல்வகுமார் மகன் உத்தண்டுராஜ் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.உடனே மேற்படி போலீசார் எதிரிகளான வெற்றிவேல் முருகன் (எ) சின்னத்தம்பி மற்றும் உத்தண்டுராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி வெற்றிவேல் முருகன் (எ) சின்னத்தம்பி மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via