கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில்  மோதல்- சசிகலா புஷ்பா பேட்டி

by Admin / 23-05-2023 02:54:26pm
கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில்  மோதல்- சசிகலா புஷ்பா பேட்டி

கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில்  மோதல் போக்கு தான் நிலவுகிறது என கோவில்பட்டியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னே கேசவன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது .

இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்துகொண்டு தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது கடந்த 9 ஆண்டுகளில் பாரதப் பிரதமர் மோடி செய்த சாதனைகள்  குறித்து வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் முன்னாள் எம்.பி யும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் கூறுகையில் :தமிழகத்தில் திமுக ஆட்சியின் அராஜகத்தையும்,மோடியின் ஆட்சியின் சாதனைகளையும்  மக்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் அமையும் வகையில் இந்த செயற் குழு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாரத பிரதமர்  ஜல்  ஜீவன் திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கயத்தார், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.ஆனால் கனிமொழி இது என்னவோ திமுக ஆட்சி கொண்டு வந்தது போல் அவர் திறந்து வைக்கிறார்.

முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அதிக அளவு கடனை  வழங்க நீதி ஒதுக்கி உள்ளார்.

தமிழ் மொழியின் மீது மிகுந்த அக்கறையும் ஆர்வம் கொண்டு தமிழை வளர்க்க பெரும் ஆர்வம்  காட்டி வருகிறார் மோடி.

ஸ்ரீவைகுண்டத்தில்  பட்டப் பகலில் அரசு அதிகாரி வெட்டி படுகொலை செய்யபட்டம் தன திராவிட ஆட்சி மாடல்.

இவ்விவகாரத்தில் கனி மொழியும் ,தமிழக அரசும் நீளி கண்னிர் வடிக்கிறது.கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசு தான் திராவிட மாடல் அரசு.

தூத்துக்குடியில் மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்து உள்ளது இதனை தடுக்க காவல்துறை தவறிவிட்டது.

கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த பிறகு காவல்துறை முழு சுதந்திரம் மாக நேர்மையாகவும் செயல்பட முடியவில்லை .இவற்றை ஆதாரத்தோடு மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்.

கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் மாவட்டத்தில்  மோதல் போக்கு தான் நிலவுகிறது.

இதனை மக்களிடம் வீடுவிடாக சென்று எடுத்து உறைக்க உள்ளோம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி  2000 ரூபாய் நோட்டை அதிகமாக கொடுத்ததனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்று பிஜேபி கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால்தான் இந்தியா முழுவதும் 2000 நோட்டை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு... 

எங்கு ஊழல் நடந்தாலும் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை தான் பதுக்கி வைத்திருக்கிறத புடுங்குறது மத்திய அரசோட கடமை தான் கடமையை கரெக்டா செய்கிறோம் என்று கூறினார்.

பேட்டி :  சசிகலா முன்னாள் எம்.பி யும் பாஜக மாநிலத் துணைத் தலைவர்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

 

கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில்  மோதல்- சசிகலா புஷ்பா பேட்டி
 

Tags :

Share via