ஈரோடு -ஜோலார்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிப்பு

by Editor / 27-05-2023 08:58:03am
ஈரோடு -ஜோலார்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிப்பு

ஈரோட்டில் இருந்து சேலம் வழியே ஜோலார்பேட்டைக்கு  இயக்கப்படும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.ஈரோடு -ஜோலார்பேட்டை இடையே  இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரம் மாற்றப்பட்டுள்ளது.ஈரோடு -ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் சேலம் வழியாக இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது .இந்த ரயில் காவிரி மற்றும் அனங்கூர் ,சங்ககிரி, மாவேலிப்பாளையம், மகுடஞ்சாவடி ,வீரபாண்டி சாலை, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் கருப்பூர் ,தின்னப்பட்டி ,டேனிஷ்ப்பேட்டை ,லோகூர், பொம்மிடி, புட்டிரெட்டிபட்டி , மொரப்பூர் ,தொட்டம்பட்டி, தாசம்பட்டி ,சாமல்பட்டி ,,குன்னத்தூர் ,காகங்கரை,
 திருப்பத்தூர் வழியாக ஜோலார்பேட்டை செல்கிறது. இந்த நிலையில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ஈரோடு -ஜோலார்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது .இதன் காரணமாக வருகிற 29ஆம் தேதி முதல் ரயிலின் இயக்க நேரம் மாற்றப்பட்டு உள்ளது,

 ஈரோடு -ஜோலார்பேட்டை ரயில் (வண்டி எண் 06846)


ஈரோட்டில் இருந்து மாலை 4.10மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.35  மணிக்கு புறப்படும்.இந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இரவு 9:30 மணிக்கு  சென்றடைவதற்கு பதிலாக இரவு 9:55 மணிக்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஜோலார்பேட்டை -ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண் 06845)தற்போது ஜோலார்பேட்டையில் காலை 5 15 மணிக்கு புறப்பட்டு காலை 10:35 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது .இந்த ரயில் 29ஆம் தேதி முதல் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு ஈரோடு சென்றடையும். இந்த ரயில் சுமார் 35 நிமிடங்களுக்கு முன்கூட்டியே ஈரோடு வந்தடையும். இந்த சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சேலம்  ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via