குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியைக்கு மரண தண்டனை

by Staff / 15-07-2023 03:23:32pm
குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியைக்கு மரண தண்டனை

சீனாவில் நர்சரி பள்ளிக் குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியை உணவில் விஷம் கலந்ததால் ஒரு குழந்தை பலியானதுடன், 24 குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதில் குற்றவாளியான வாங் யுன் (39) என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாங் யுன் இதுபோன்ற மோசமான செயலைச் செய்துள்ளார். இந்த சம்பவம் மார்ச் 2019-இல் நடந்தது.

 

Tags :

Share via