பெண்கள் ஆடி வெள்ளியை பின்பற்றுகின்ற பொழுது  மாங்கல்யம்,  குழந்தை, செல்வம் ஆகிய அனைத்துபேறுகளைபெறுவா்.

by Admin / 21-07-2023 10:13:13am
 பெண்கள் ஆடி வெள்ளியை பின்பற்றுகின்ற பொழுது  மாங்கல்யம்,  குழந்தை, செல்வம் ஆகிய அனைத்துபேறுகளைபெறுவா்.

தமிழ் மாதமான ஆடி வெள்ளிக்கிழமை பருவ மழையின் தொடக்கத்தை, வருண தெய்வத்தின் சக்தியின் வெளிப்பாடாக குறியீடாக தமிழ் சமூகம் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டு வருகிறது. இந்த மாதம் வெள்ளிக்கிழமைகளில் சக்தி வழிபாடு, நாக வழிபாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பெண்கள் ஆடி வெள்ளிகளில் பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

 ஆடி மாசத்தில் வரலட்சுமி வழிபாடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. இந்த  மாதம் பெண் தெய்வங்களின் கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் ஆராதனைகள் நடைபெறுவது உலகத்தினுடைய நன்மைக்கு உகந்ததாக அமையும் என்பது காலம் காலமாக மக்களால் நம்பப்பட்டு வருகின்ற ஒரு வழிபாடாகும்... பெண்கள் இந்த ஆடி வெள்ளியை பின்பற்றுகின்ற பொழுது  மாங்கல்யம்,  குழந்தை, செல்வம் ஆகிய அனைத்துபேறுகளையும் பெறக்கூடியதாக சக்தி ஆகிய பெண் தெய்வம் வாரி வழங்கும் என்பது நம்பிக்கை.

இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு வெற்றிலை, மஞ்சள், குங்குமம், சிவப்பு துணி, தாலி கயிறுகளை பூஜையில் வைத்து வழங்குவது என்பது வழக்கம் ..குறிப்பாக ,,இது தாலியை பாதுகாக்கும் சடங்காக கூட கொள்ளலாம். பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு சடங்காக கருதுவதற்கும் வாய்ப்பு உண்டு.. அம்மன் கோயில்களில் பாம்பு புற்று, பாம்பு சிலைகளுக்கு பால், சக்கரை, வெல்லம் போன்றவற்றை வைத்து படையில் செய்வது குறிப்பிடத்தக்கது,

ஆடி மாசத்தில் வைக்கின்ற இந்த வழிபாடானது மழை வேண்டி செய்யப்படக் கூடிய ஒரு வழிபாடாகவும் வளப்பம் தரப்பட வேண்டும் என்று வேண்டுகிற ஒரு வேண்டுதல் வழிபாடாகவும் இதை நாம் கருதுவதற்கு முடியும் .ஆடி மாதத்தில், அம்மன் கோவில்களில் வழிபடுவதன் மூலம் அவரவர்களுடைய குடும்பத்தில் இருக்கின்ற தீய சக்திகள் அகன்று விடும். செல்வம் கொழிக்கும்- கல்வி இன்னபிறபேறு களை வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு அம்மன் வழங்குவார் என்றும் திருமணம் தொடர்பான பிள்ளைப் பேரு தொடர்பான தடைகள் எல்லாம் அகன்று விடும் என்றும் அனைத்து முயற்சிகளுக்கும் அம்மன் துணையாக நின்று அவளை வழிபட்டவர்களுக்கு வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளைச் செய்வாள் என்பதுதான் இந்த ஆடி மாதத்தினுடைய சிறப்பு. அதனால் இது ஒரு வளத்தை நோக்கி ஒரு வாழ்வை பூரணமாக்கக்கூடிய ஒரு வழிபாடாக இந்த ஆடி மாதத்தின் உடைய வழிபாடு அமைகிறது.

 

Tags :

Share via