தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திரு விழா  நாளை உள்ளூர் விடுமுறை

by Editor / 04-08-2023 08:41:21am
தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திரு விழா  நாளை உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திரு விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் இன்று இரவு 9 மணி அளவில் பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி நாளை 5-8-23 காலை 7 மணி அளவில் திருவிழாகூட்டு திருப்பலியுடன் துவங்குகிறது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 

 

Tags :

Share via