வீட்டிலே பிரசவம்.. தாய்,சேய் பலி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் தாய், சேய் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வசந்தி என்பவர் 6வது முறையாக வீட்டில் பிரசவித்த ஆண் குழந்தை உயிரிழந்தது. அதிக ரத்தப்போக்கு ஏற்படவே, வசந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு சிசுவின் சடலம் இருந்துள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வசந்தி வீட்டில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :