மீனவர் கொலை. 3 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

by Staff / 11-09-2023 01:28:51pm
மீனவர் கொலை. 3 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் சகாயம் (வயது 45). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும், கன்னியா குமரி சர்ச் சன்னதி தெருவை சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவரை அந்த 3 சிறுவர்களும் சேர்ந்து குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். கன்னியாகுமரி போலீசார் சர்ச் சன்னதி தெரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவர் ஒருவரையும், 16 வயது இன்னொரு சிறுவரையும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த 3 சிறுவர்களையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்க ளை சீர்திருத்த பள்ளியில் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். அதன்படி அந்த 3 சிறுவர்களும் நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via