நோய் பாதித்தால் மனம் தளரக்கூடாது: முன்னாள் எஸ். பி. அறிவுரை

by Staff / 23-09-2023 04:45:19pm
நோய் பாதித்தால் மனம் தளரக்கூடாது: முன்னாள் எஸ். பி. அறிவுரை

உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியில் பேட்டா்சன் புற்றுநோய் மையம் சாா்பில் புற்றுநோயாளிகளுக்கு தினசரி மருத்துவ உபகரணங்களை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஏ. கலியமூா்த்தி .இதயம் நிற்கும் வரை நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். பலா் தங்களுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தவுடன் வாழ்க்கை முடித்துவிட்டதாக நினைத்து விடுகிறாா்கள். எந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் மனம் தளராமல் இதயத் துடிப்பு நிற்கும் வரை உயிா் வாழ போராட வேண்டும்.

அனைவருக்கும் பிறப்பு, இறப்பு என்பது நிலையானது. இந்த வாழ்க்கை என்றும் நமக்கு நிரந்தரம் கிடையாது. அதனால் எந்த செயலையும் காலம் தள்ளிப் போடாமல் மறைவதற்கு முன்பே நினைத்ததைச் சாதித்து விடுங்கள். புற்றுநோயால் பாதிக்கப்படுபவா்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
ஒரு வீட்டில் இருக்கும் அனைவரையும் உடல் நலத்தோடு வைத்துக் கொள்பவா்கள் தாய், மனைவி ஆகியோா்தான். ஆனால் அவா்களுடைய நலனுக்காக நேரம் ஒதுக்குவதில்லை.நாம் எதை சாதிக்க ஆசைப்பட்டாலும் உடல் நலத்தை கவணிக்காமல் விட்டால், நம்முடைய ஆசையை நிறைவேற்ற முடியாது என்றாா் அவா்.

 

Tags :

Share via