ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள 30 கிலோ கொகைன் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் பிடித்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெனிஹால் என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு வாகனத்தில் இருந்து 30 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜம்மு மண்டல ஏடிஜிபி முகேஷ் சிங் தெரிவித்தார். இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
Tags :