வெடிகள் பேக்கிங் பார்சல் பணியின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி காத்தாயி அம்மன் கோயில் அருகில் மோகன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு சுப துக்க நிகழ்ச்சிகளுக்கும், தீபாவளி பண்டிகையின்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று வெடிகள் பேக்கிங் பார்சல் பணியின் போது குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மாணிக்கம்,மதன்,மகேஷ்,ராகவன்,ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு.உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சிதறி விழுந்துள்ளன; பொறையார் போலீசார் விசாரணை.பட்டாசு நிறுவனத்தின் உரிமையாளர் மோகன் கைதுசெய்யபபட்டர்.வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய்.3 இலட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு.
Tags : 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு