வால்பாறைக்கு சுற்றலா கல்லூரி மாணவர்கள் 5பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு. 

by Editor / 21-10-2023 09:13:34am
வால்பாறைக்கு சுற்றலா கல்லூரி மாணவர்கள் 5பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு. 

 கோவை மாவட்டம்,வால்பாறைக்கு நேற்று கோவையை அடுத்த கிணத்துக்கடவு தனியார்  கல்லூரி மாணவர்கள்10 பேர் வால்பாறைக்கு சுற்றுலாவுக்கு இரு சக்கர வாகனத்தில்  வந்துள்ளனர். அங்கு அவர்கள் மதியம் ஒரு ஓட்டலில் உணவருந்தி விட்டு பின்பு சோலையார் சுங்கம் ஆர்ச் பகுதிக்கு சென்ற 10 பேரும் அங்குள்ள ஆற்றில் இறங்கி குளிக்க சென்றுள்ளனர் அப்போது சரத்(20) என்ற மாணவனை தண்ணீரில் சிக்கி இழுத்து சென்றதை பார்த்த நபில்(20) என்ற மாணவர் தண்ணீரில் இறங்கி உள்ளார், அவரையும் தண்ணீர் இழுத்து சென்றதால் மற்ற மாணவர்களான வினித்குமார் (20), தனுஷ்குமார் (20), அஜய் (20) ஆகியோரும் ஆற்றில் இறங்கி காப்பாற்ற சென்ற போது அவர்களும் தண்ணீரில் சிக்கி உயிரிழந்தனர். 5பேர் நீரில் முழகி இறந்ததை அடுத்து மற்ற மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு காவல் துறைக்கு தகவல் கொடுக்க பட்டது தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து தண்ணீரில் மூழ்கிய 5 மாணவர்களையும் தீவிரமாக தேடி 5பேரின் உடலையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு 5பேரின் உடலையும் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது. தகவல் அறிந்து தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி பொள்ளாச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார். இது குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் வால்பாறையில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 

வால்பாறைக்கு சுற்றலா கல்லூரி மாணவர்கள் 5பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு. 
 

Tags : வால்பாறைக்கு சுற்றலா கல்லூரி மாணவர்கள் 5பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு. 

Share via