குண்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 போலீசார் மரணம்
மெக்சிகோவில் நேற்று 11 போலீசார் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். தெற்கு மாநிலமான Guerreroவில் உள்ள Coyuca de Benitez நகராட்சியில் போலீஸ் கான்வாய் மீது குண்டர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 போலீசார் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தலைவிரித்தாடுகிறது. போதைப் பொருள் வியாபாரிகளே இந்தத் தாக்குதலுக்குக் காரணமென சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீசாரின் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.
Tags :