உலக கோப்பை போட்டிகளில் வான வேடிக்கைகள்கிடையாது.- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் .

by Staff / 01-11-2023 12:20:03pm
 உலக கோப்பை போட்டிகளில் வான வேடிக்கைகள்கிடையாது.-  பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் .

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மும்பையில் வாணவேடிக்கை இருக்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் . நாட்டின் தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு கொண்ட நகரமாக அடையாளப்படுத்தப்படுகிறது.. இப்போது மும்பையும் காற்று மாசுபாடு கொண்ட நகரமாக இணைந்துள்ளது. இந்நிலையில், பி.சி.சி.ஐ செயலாளர். ஜெய் ஷா, “கடந்த சில நாட்களாக மும்பையில் காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சுற்றுசூழல் பாதிப்பை பற்றி நான் ஐ.சி.சி-யிடம் எடுத்துக்கூறினேன். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் வானவேடிக்கைகள் கிடையாது. . சுற்றுசூழலை பாதுகாப்போம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via