பிரதமரை கடித்து வைத்த வளர்ப்பு நாய்
ஆஸ்திரிய பிரதமர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை மால்டோவா அதிபர் மியா சாண்டுவின் செல்ல நாய் கடித்துள்ளது. அலெக்சாண்டர் மால்டோவாவுக்கு ஒரு பயணம் சென்றிருந்தார். இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, மியா சாண்டுவின் செல்ல நாய் அலெக்சாண்டரை கடித்தது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மால்டோவா நாடாளுமன்றத்தில் கைகளில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு கட்டுப்போட்டபடி உரையாற்றினார். அலெக்சாண்டர் தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது நாய்க்கு ஒரு பொம்மையை பரிசாக கொடுத்துள்ளார்.
Tags :