தெலங்கானா முதலமைச்சரை சீண்டும் காங்கிரஸ் கட்சியினர்

by Staff / 25-11-2023 01:18:01pm
தெலங்கானா முதலமைச்சரை சீண்டும் காங்கிரஸ் கட்சியினர்

தெலங்கானா தேர்தலில் வெற்றி பெற்றால், சந்திர சேகர் ராவ் கட்சியில் இணைந்துவிடுவோம் என கூறி காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்து வருவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார். மஞ்செரியல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் 1956இல் ஆந்திராவுடன் தெலங்கானா இணைத்ததால் தான் நாம் 50 ஆண்டுகளாக பல்வேறு துயரங்களைச் சந்தித்தோம். 1960-2014 வரை 400 பேர் உயிரிழந்தனர். அந்த காங்கிரஸை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்றார்.

 

Tags :

Share via