ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பலி

by Staff / 05-01-2024 12:15:49pm
 ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பலி

ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதல்களால் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாகி வருகின்றனர். வியாழன் அன்று கான் யூனிஸ் அருகே ஒரு வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 வயது குழந்தையும் அடங்கும். அவர்கள் அனைவரும் காசாவின் பிற பகுதிகளில் இருந்து வந்து இங்கு தஞ்சம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில், ஹமாஸின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, செவ்வாய்கிழமை இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

 

Tags :

Share via