வேங்கைவயல் வழக்கு பிப்.12க்கு ஒத்திவைப்பு

by Staff / 29-01-2024 02:17:38pm
வேங்கைவயல் வழக்கு பிப்.12க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதுதொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் பிப்.12ம் தேதி விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

 

Tags :

Share via