பிரபல திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி சடலமாக மீட்பு

by Staff / 14-02-2024 11:10:06am
 பிரபல திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி  சடலமாக மீட்பு

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி (65) நேற்று  வயநாட்டில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது முதல் படமான 'மிழியில் கண்ணீருமாய்' 1987 இல் வெளியானது, அவரது இயக்கத்தில் கடைசி படம் 'பாட்டுபுஸ்தகம்' 2013 இல் வெளியாகியிருந்து. கோலேரி இயக்கிய மற்ற படங்கள் 'அவன் ஆனந்தபத்மநாபன்'; ‘வரும் வராதிரிக்கில்லா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். வயநாட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த அவர், கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போனதாக புகார் எழுந்தது. அவரது உறவினர்கள் வீட்டை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via