பாமக போராட்டம்.. வடலூரில் 700 போலீசார் குவிப்பு

by Staff / 17-02-2024 12:44:50pm
பாமக போராட்டம்.. வடலூரில் 700 போலீசார் குவிப்பு

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபை அமைந்துள்ள பகுதியில் சர்வதேச மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிலையில், சத்தியஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக போராட்டம் அறிவித்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால், 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்களை கலைக்கும் வஜ்ரா தண்ணீர் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via