14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 45 வயது நபர்

by Staff / 11-03-2024 11:58:49am
14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 45 வயது நபர்

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை 45 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஷேக் சுபானி (45) என்ற நபர், அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த நேரத்தில் சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதை அடுத்து, போலீசில் புகார் அளித்தனர். குற்றத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via