நள்ளிரவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து

by Staff / 18-03-2024 11:39:41am
நள்ளிரவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மதார் ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே நள்ளிரவு 1 மணியளவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ரயில் தடத்தில் வந்துகொண்டிருந்த சபர்மதி-ஆக்ரா கான்ட் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரயிலில் அச்சமயம் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via