அரவிந்த் கெஜ்ரிவால் கைது - ஐநா சபை கவலை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்ததை அடுத்து இந்தியா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநா சபை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் எனவும் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என ஐநா சபை நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் .
Tags :