பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

by Staff / 30-03-2024 02:00:48pm
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

திண்டுக்கல் அருகே தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் அமுல் பிரகாஷ் வயது 34. டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 22 ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை அடுத்து உறவினர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எரியோடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via