தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

by Editor / 30-08-2021 11:59:08am
தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

 தென் அமெரிக்கநாடான பெருவின் அப்ருனிமெக் மாகாணத்தின் ஹடபம்பாஸ் நகரில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது . இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் , அந்த காப்பர் சுரங்கத்தில் 27.8.2021 அன்று வழக்கமான பணியை முடித்த 18 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது .

மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது , ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் . மேலும் , 3 பேர் படுகாயமடைந்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச் சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

 

Tags :

Share via