கொட நாடு கனகராஜை கொலை செய்ய செய்யச்சொன்ன கோவை நபர்?
கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளி கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததாக போலீஸ் பதிவு செய்திருக்கிறது. ஆனால் அவர் விபத்தில் உயிரிழந்த இருக்க வாய்ப்பில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மறு விசாரணையில் கனகராஜ் சகோதரர் தனபால் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனால், சந்தோஷ் சாமி அளித்திருக்கும் தகவல் திடுக்கிட வைக்கிறது. கனகராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது.
கொடநாடு வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் சந்தோஷ் சாமி தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார் . கொடநாடு வழக்கில் போலீசார் தங்களை கேரளாவில் கைது செய்தபோது போலீஸ் வாகனத்துடன் மூன்று கார்களில் சில நபர்களும் வந்து இருந்தனர். அப்போது அதிமுக பிரமுகர் சஜீவன் சகோதரர் செபியும் வந்திருந்தார்.
அவர் கனகராஜை கொலை செய்யச் சொல்லி கோயம்புத்தூரில் இருந்த ஒருவருடன் செல்போனில் பேசினார் . ஆனால் யாருடன் பேசினார் என்று தெரியவில்லை கனகராஜ் சேலத்தில் ஒரு விருந்தில் இருக்கிறார். அவரை உடனே கொலை செய்ய வேண்டும் என்று பேசினார். அவர் அப்படி போனில் பேசிய மறுநாள்தான் கனகராஜ் மரணமடைந்தார் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார் சந்தோஷ் சாமி.
சந்தோஷ் சாமி சொன்ன தகவல்களின் அடிப்படையில் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. குற்றவாளிகளை கைது செய்யும் போது போலீஸ் வாகனம் தான் செல்லும். அந்த வாகனத்துடன் மேலும் மூன்று வாகனங்கள் வந்ததாக சொல்கிறார் சந்தோஷ் சாமி. அதில் பலர் இருந்ததாகவும் சந்தோஷ் சாமி கூறியிருக்கிறார். குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போலீஸ் ஏன் வேற்று ஆட்களை அழைத்து செல்ல வேண்டுமென்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கனகராஜை கொலை செய்யச் சொல்லி செபி உத்தரவிட்டிருக்கிறார் என்றால், யார் அந்த கோயம்புத்தூர் நபர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், கனகராஜை கொலை செய்யச்சொல்லி செபிக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
Tags :