சங்கராபுரம் பட்டாசுக்கடை விபத்து பட்டாசு கடைகளில் சோதனை...

by Editor / 29-10-2021 04:18:39pm
சங்கராபுரம் பட்டாசுக்கடை விபத்து பட்டாசு கடைகளில் சோதனை...

 

திருக்கோவிலூர்  உள்ள பட்டாசு கடைகளில் போலீசார், வருவாய் துறையினர் சோதனை.
 
கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் கடந்த 26ஆம் தேதி பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் பலியாகினர்.  பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

 இதனைத் தொடர்ந்து இன்று,திருக்கோவிலூர் பகுதியில் உள்ள 13 பட்டாசு கடைகள் மற்றும் 2 பட்டாசு தயாரிக்கும் ( நாட்டு வெடி) இடங்களை திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் , திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் , தீயணைப்பு நிலைய அலுவலர் உள்ளிட்டவர்களின் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது.

 பட்டாசு கடையின் உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற்றுள்ளனரா எனவும்,  அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும்,  பட்டாசு கடைகளில் பராமரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீயை அணைக்க பயன்படும் தண்ணீர் மணல் சிலிண்டர்கள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தனர்.

 

Tags :

Share via