ஜூலி புகாரில்  திருப்பம் 

by Admin / 06-12-2021 01:18:37am
ஜூலி புகாரில்  திருப்பம் 

ஜூலி புகாரில்  திருப்பம் 

ஜூலி  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்ற  நல்ல பெயரை எடுத்த  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்   தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சினிமா என் பிஸியாக இருந்து வருகிறார்   நான்கு வருடங்கள் காதலித்த தன்னுடைய காதலர் மீது ஜூலி போலீசில் புகார் . 

சென்னை அண்ணாநகரில் , சலூன் கடையில் பணியாற்றி வரும்  இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்ததாகவும் ஜூலி கூறியிருக்கிறார்.  தன்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து  இருசக்கர வாகனம், 16 கிராம் தங்க செயின், ஃப்ரிட்ஜ் ,  2.30 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும்  தெரிவித்து இருக்கிறார். 

 போலீசார்  மனிஷை காவல் நிலையம் அழைத்து  விசாரணை மேற்கொண்டனர்.  2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது  மனிஷ் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்  நட்பு ஏற்பட்டு  காதலாக மாறியுள்ளது. சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் பழக மனீஷ் உடனான காதலை துண்டித்து  வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஜூலியின்காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு  அடிக்கடி கால் செய்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் மனிஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .  ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் , இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்தாா்.

போலீசார் ஜூலியும் மனிஷும்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  அழித்துவிட்டு ஜூலி - மனிஷ்  இருவருக்கும் அறிவுரைக்கூறி  அனுப்பி வைத்துள்ளனர். காதலர் திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via