குற்றாலநாதர் கோவிலில் 15 ஆம் தேதி திருவாதிரைத்திருவிழா தேரோட்டம்.  

by Staff / 12-12-2021 07:25:10pm
குற்றாலநாதர் கோவிலில் 15 ஆம் தேதி திருவாதிரைத்திருவிழா தேரோட்டம்.  

 

குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும்  கார்த்திகை மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறுவது  வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா  நோய்தொற்று காரணமாக திருவாதிரைத் திருவிழா நடைபெறவில்லை.இந்த நிலையில் கொரோனோதொற்று தளர்வுகள் அறிவிக்கபட்டதால் இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா 11ஆம் தேதி காலை 11ஆம் தேதிதொடங்கியது. இதையொட்டி காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
திருவிழா வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு மேல், இரவு 7 மணிக்கு மேலும் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.இதன் தொடர்ச்சியாக 
வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தமிழகத்திலேயே இந்த ஆலயத்தில் மட்டும் 5 திருத்தேர்கள் தேரோட்டம் நடக்கிறது. இதன் காரணமாக திருத்தேர்களை செப்பணியிட்டு சீரமைக்கும் பணிகள் தீவீரமாக நடந்து வருகின்றன.

தொடர்ந்து 18-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 20-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.

 

Tags :

Share via