சென்னையில் ஒரேநாளில் 7149 பேருக்கு கொரோனா தொற்று 

by Editor / 10-05-2021 07:17:55pm
சென்னையில் ஒரேநாளில் 7149 பேருக்கு கொரோனா தொற்று 



தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 28,978பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14லட்சத்து 09ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,52,389 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 16,925பேர் ஆண்கள், 12,053பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 7149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
 232 பேர் உயிரிழந்துள்ளார். 98 பேர் தனியார் மருத்துவமனையிலும், 134 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,880ஆக அதிகரித்துள்ளது. 20,904 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,40,968ஆக அதிகரித்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via