உப்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட 9 பெண்கள்

by Staff / 08-04-2022 01:28:23pm
 உப்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட 9 பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் உப்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட 9 பெண்களை தனது குழந்தைகள் உதவியுடன் பத்திரமாக மீட்ட மீனவரை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.

புன்னைக்காயலில் தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள புனித தோமையார் ஆலயத்திற்கு தவக்காலத்தை முன்னிட்டு அடைக்கலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் சென்றுள்ளனர்.

அப்போது சிலர் உப்பாற்றில்  இறங்கியபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி  9 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனைக் கண்ட புன்னக்காயல்  மீனவர் ஜேமன் படகில் சென்று தனது குழந்தைகள் உதவியுடன் சென்று 9 பெண்களையும் பத்திரமாக மீட்டார். 
 

 

Tags :

Share via