பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி

by Staff / 15-09-2022 04:58:04pm
பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி

ஜம்மு - காஷ்மீர்: பூஞ்ச் ​​மாவட்டம் சூரன்கோட்டில் இருந்து ரஜோரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட பேருந்து மஞ்சகோட் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூஞ்ச் ​​மாவட்டத்தின் மண்டியில் நேற்று நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via